ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் மீனவர்களின் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து வெற்றிமாறன் இயக்க உள்ள வாடிவாசல் படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார் சூர்யா. ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்காக ஜல்லிக்கட்டு காளைகளுடன் பிரத்யேக பயிற்சியும் மேற்கொண்டு வந்தார் சூர்யா.
இந்நிலையில், வாடிவாசல் படத்துக்கு புது சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஏனெனில் விடுதலை படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் பிசியானதன் காரணமாக வாடிவாசல் படத்தின் முதற்கட்ட பணிகள் முடங்கி உள்ளதாம். இதனால் அப்படத்தின் ஷுட்டிங்கும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வாடிவாசல் படம் தள்ளிப்போவதால் அதற்கு முன் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் குறுகிய கால தயாரிப்பில் உருவாகும் படமொன்றில் நடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளாராம்.