இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

'மூடர் கூடம்' படத்தை இயக்கிய நவீன் அடுத்து விஜய் ஆண்டனி, அருண் விஜய், அக்ஷராஹாசன் மற்றும் பலர் நடிக்கும் 'அக்னி சிறகுகள்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்றுள்ளது.
இப்படத்திற்கான பின்னணி இசையமைக்கும் வேலைகளை இப்படத்தின் இயக்குனர் நவீன், இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் ஆகியோர் ஜும் மீட்டிங் மூலம் இறுதி செய்து வருகிறார்களாம்.
“இன்று ஜும் வழியாக 'அக்னி சிறகுகள்' படத்தின் பின்னணி இசையை இறுதி செய்து கொண்டிருந்தோம், நானும் கீ போர்டு புரோகிராமர் இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன், . முதல் ரீலில் தாடியுடன் இருக்கும் விஜய் ஆண்டனியை அடையாளம் தெரியாமல் ஹீரோ யாரு சார் என்று புரோகிராமர் கேட்டார்,” என நவீன் டுவீட் செய்துள்ளார்.
அதற்கு விஜய் ஆண்டனி, “இயக்குனர் நவீன் அவருடைய கதை சொல்லல் மூலம் என்னை இம்ப்ரஸ் செய்துவிட்டார். முதல் நாளிலிருந்தே அவ்வளவு தெளிவு. மற்ற நடிகர்களைப் போலவே நானும் எனது படத்திற்கான வெளிச்சத்தைப் பார்க்க ஆவலாகக் காத்திருக்கிறேன். வலிமையான கரு. இந்த சோதனைக் காலத்தில் 'அக்னி சிறகுகள்' நிச்சயம் நிற்கும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.




