ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன் | போட்டோ எடுக்க போய் நடிகராகியிட்டேன்! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர் நடிக்க இருந்து, பின் கைவிடப்பட்ட அவரது “உடன்பிறப்பு” திரைப்படம் | உரிமைக்குரல், நட்புக்காக, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | சவுந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரியங்கா மோகன் | சிம்பு, தனுஷ் மோதல் இருக்கிறதா : சமுத்திரக்கனி பதில் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ‛ரணபலி' படத்தின் முதல் பாடல் வெளியானது | துரந்தர் 2 படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்ட யாமி கவுதம் | மார்ச் 6ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் காந்தி டாக்ஸ் | பிரதமர் மோடியுடன் சந்திப்பு குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சி |

'மூடர் கூடம்' படத்தை இயக்கிய நவீன் அடுத்து விஜய் ஆண்டனி, அருண் விஜய், அக்ஷராஹாசன் மற்றும் பலர் நடிக்கும் 'அக்னி சிறகுகள்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்றுள்ளது.
இப்படத்திற்கான பின்னணி இசையமைக்கும் வேலைகளை இப்படத்தின் இயக்குனர் நவீன், இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் ஆகியோர் ஜும் மீட்டிங் மூலம் இறுதி செய்து வருகிறார்களாம்.
“இன்று ஜும் வழியாக 'அக்னி சிறகுகள்' படத்தின் பின்னணி இசையை இறுதி செய்து கொண்டிருந்தோம், நானும் கீ போர்டு புரோகிராமர் இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன், . முதல் ரீலில் தாடியுடன் இருக்கும் விஜய் ஆண்டனியை அடையாளம் தெரியாமல் ஹீரோ யாரு சார் என்று புரோகிராமர் கேட்டார்,” என நவீன் டுவீட் செய்துள்ளார்.
அதற்கு விஜய் ஆண்டனி, “இயக்குனர் நவீன் அவருடைய கதை சொல்லல் மூலம் என்னை இம்ப்ரஸ் செய்துவிட்டார். முதல் நாளிலிருந்தே அவ்வளவு தெளிவு. மற்ற நடிகர்களைப் போலவே நானும் எனது படத்திற்கான வெளிச்சத்தைப் பார்க்க ஆவலாகக் காத்திருக்கிறேன். வலிமையான கரு. இந்த சோதனைக் காலத்தில் 'அக்னி சிறகுகள்' நிச்சயம் நிற்கும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.