ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் வேறெந்த தொடராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாத சாதனை ராமாணயம் தொடர்ந்து படைத்து வருகிறது. ராமானந்த் சாகர் தயாரிப்பில் உருவான இந்த தொடர், 1987ம் ஆண்டில் தூர்தர்ஷனில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரந்தோறும் ஒளிபரப்பானது.
ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்த தொடரை பார்ப்பதற்காக மக்கள் வாரம் முழுக்க காத்து கிடந்ததும், கிராமங்களில் மரத்தடியில், பஞ்சாயத்து ஆபீசில் வைக்கப்பட்டிருந்த சின்னஞ்சிறு தொலைக்காட்சி பெட்டியில் நூற்றுக்கணக்கான மக்களும் இமை கொட்டாமல் பார்த்தது வரலாறு.
கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தபோது தூர்தர்ஷன் ராமாணயத்தை 33 ஆண்டுகளுக்கு பிறகு மறு ஒளிபரப்பு செய்தது. அப்போதும் கோடிக் கணக்கான மக்கள் கண்டு ரசித்தார்கள். இப்போது உலகிலேயே அதிக மக்களால் பார்க்கப்பட்ட முதல் தொடர் என்ற சாதனையை ராமாயணம் படைத்துள்ளது. இதனை தூர்தர்ஷன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருக்கிறது.
இந்நிலையில் இத்தொடர் கலர்ஸ் இந்தி தொலைகாட்சியில் நேற்று முன்தினம் (மே 06) முதல் மீண்டும் ஒளிபரப்பாகிறது. விரைவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகும் என்கிறார்கள்.




