தெலுங்கு படங்களில் நடிப்பதில் உள்ள சங்கடம் இதுதான் : சம்யுக்தா | என்டிஆருக்கு பாரதரத்னா : சிரஞ்சீவி விருப்பம் | 'தி கோட்' - அமெரிக்கா புறப்பட்ட விஜய் | மே 31ல் திரைக்கு வரும் கருடன் திரைப்படம் | அரண்மனையில் கலகலப்பு : சுந்தர்.சியின் அடுத்த பிளான் | கல்கி கன்னட உரிமையை கைப்பற்றிய யஷ் பட நிறுவனம் | தோனி சாயலில் பாகுபலி : ஒப்புக்கொண்ட ராஜமவுலி | ரஜினியை சந்தித்த ஆர்டிஎக்ஸ் இயக்குனர் | கதை நாயகன் ஆன தயாரிப்பாளர் | வானத்தைப்போல ஸ்வேதா திருமணம்: காதலரை மணந்தார் |
பாலிவுட்டில் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் 'ராமாயணம்'. இந்த படம் 3 பாகங்களாக வெளிவருகிறது. இதில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய்பல்லவி சீதையாகவும் நடிக்கிறார்கள். நிதிஷ் திவாரி இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் உள்ள அரண்மணை ஒன்றில் நடந்தது. இது டெஸ்ட் ஷூட் என்றும் கூறப்படுகிறது. இதில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய்பல்லவியும் நடித்தார்கள்.
இந்த படப்பிடிப்பு படங்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் பரவி வைரல் ஆனது. படப்பிடிப்பில் செல்போன்களை கொண்டு வரவும், பயன்படுத்தவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தும் படங்கள் கசிந்தது படப்பிடிப்பு குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படத்தை பார்த்த நெட்டிசன்கள், சீதையாக சாய்பல்லவி பொருத்தமாக இருக்கிறார். ஆனால் ராமர் கேரக்டருக்கு ரன்பீர் கபூர் பொருத்தமாக இல்லை. அவர் முகத்தில் ராஜக்கலை இல்லை. கடைசியாக 'அனிமல்' படத்தில் ஆபாச காட்சிகளில் நடித்து விட்டு அவர் ராமராக நடிப்பதை ஏற்க முடியாது என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.