நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

யூடியூப் மூலம் பிரபலமாகி 'வேலையில்லா பட்டதாரி 2, நான் சிரித்தால், கைதி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கிஷோர் ராஜ்குமார். இதையடுத்து 'நாய் சேகர்' என்கிற படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கிஷோர் ராஜ்குமார் புதிதாக இயக்கி, கதாநாயகனாக புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'கோயம்பத்தூர் மாப்பிள்ளை' என தலைப்பு வைத்துள்ளதாக முதல் பார்வை போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை அன்னா பென் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் 'கொட்டுக்காளி' படத்தில் நடித்திருந்தார்.
சமீபகாலமாக நடிகர் விஜய் நடித்த பழைய படங்களின் தலைப்பில் 'லவ் டுடே, ஒன்ஸ் மோர், யூத்' ஆகிய படங்களின் வரிசையில் கோயம்பத்தூர் மாப்பிள்ளை தலைப்பையும் மீண்டும் பயன்படுத்தி வருகின்றனர் என்கிறார்கள்.