மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் | படப்பிடிப்புக்கு 5 நாட்களுக்கு முன்புதான் பைசன் படத்தின் ஸ்கிரிப்டை படித்தேன்! - துருவ் விக்ரம் | ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் இணைந்த பார்த்திபன் | பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு : நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவு | 'கோச்சடையான்' பட விவகாரம் : ரஜினி மனைவி லதாவுக்கு சிக்கல் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை வாங்கிய ரோமியோ பிக்சர்ஸ்! | மோகன்லாலை தொடர்ந்து சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்! | காப்புரிமை தொடர்பான 'சோனி' வழக்கு : இளையராஜா பதில் அளிக்க கோர்ட் உத்தரவு | ப்ரீ புக்கிங்கில் முந்தும் 'டியூட்' | 3 ஆண்டு தலைமறைவுக்கு பின் நடிகை மீரா மிதுன் ஆஜர் |
எல்லா கதைகளிலும், ராமாயணம், மகாபாரதத்தின் தாக்கம் இருக்கும் என்பார்கள். சில படங்கள் நேரடியாகவே இந்த இரண்டையும் தழுவி எடுக்கப்படுகிறது. மணிரத்தினத்தில் பெரும்பாலான படங்கள் இவற்றை தழுவியதாக இருக்கும். பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் ஆதிபுருஷ் படம் இந்த வரிசையிலான படம் தான்.
தற்போது கன்னடத்தில் ராமாயண கதையை தழுவி லங்கே என்ற படம் தயாராகி உள்ளது. லங்கே என்பது இலங்கையை குறிக்கும் சொல். இதனை ராம் பிரசாத் இயக்கி உள்ளார். யோகேஷ், சஞ்சாரி விஜய், காவ்யா ஷெட்டி, நடிக்கிறார்கள். படம் வருகிற 10ம் தேதி வெளிவருகிறது.
இந்த படம் பற்றி இயக்குனர் ராம்பிரசாத் கூறியதாவது: கர்நாடகாவில் மிக நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகிறது. இந்த படத்தின் கதையும், இதில் இடம் பெறும் சில சம்பவங்களும் ராமாணயத்தில் இடம்பெற்றவையாக இருந்த ஒற்றுமையை கண்டு வியந்து போனேன்.
ராமன், சீதை, ராவணன், அனுமன் காதாபாத்திரங்களை ஒத்த கேரக்டர்களே இந்த படத்திலும் இடம்பெறுகிறது. அதனால்தான் படத்திற்கும் லங்கே என்று டைட்டில் வைத்திருக்கிறோம். என்றார்.