பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

2012ல் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா நடிப்பில் பிரபு சாலமன் இயக்கிய படம் 'கும்கி'. அப்படம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தை மதியழகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரீதா ராவ் ஆகியோர் நடிப்பில் இயக்கியுள்ளார் பிரபு சாலமன். இந்த படமும் யானையை பின்னணியாக கொண்ட கதையில் உருவாகியுள்ளது.
இந்தப் படத்திற்காக சந்திர பிரகாஷ் ஜெயினிடம், இயக்குனர் பிரபு சாலமன் 1.5 கோடி கடன் வாங்கிய நிலையில், அதை வட்டியுடன் சேர்த்து 2.5 கோடியாக அவருக்கு கொடுக்காததால் இப்படத்தை வெளியிட தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கும்கி 2 படத்திற்கு இடைக்காலத் தடை விதித்தார். இதை நீக்க கோரி பிரபு சாலமன் தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. பிரபு சாலமன் படத்தின் இயக்குனர் மட்டுமே. அவர் வாங்கிய கடனுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என 'கும்கி 2' படத்தின் தயாரிப்பு நிறுவனம் வைத்த கோரிக்கை வைத்தது. இதை ஏற்ற நீதிமன்றம் 'கும்கி 2' படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளது.