புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

2012ல் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா நடிப்பில் பிரபு சாலமன் இயக்கிய படம் 'கும்கி'. அப்படம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தை மதியழகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரீதா ராவ் ஆகியோர் நடிப்பில் இயக்கியுள்ளார் பிரபு சாலமன். இந்த படமும் யானையை பின்னணியாக கொண்ட கதையில் உருவாகியுள்ளது.
இந்தப் படத்திற்காக சந்திர பிரகாஷ் ஜெயினிடம், இயக்குனர் பிரபு சாலமன் 1.5 கோடி கடன் வாங்கிய நிலையில், அதை வட்டியுடன் சேர்த்து 2.5 கோடியாக அவருக்கு கொடுக்காததால் இப்படத்தை வெளியிட தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கும்கி 2 படத்திற்கு இடைக்காலத் தடை விதித்தார். இதை நீக்க கோரி பிரபு சாலமன் தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. பிரபு சாலமன் படத்தின் இயக்குனர் மட்டுமே. அவர் வாங்கிய கடனுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என 'கும்கி 2' படத்தின் தயாரிப்பு நிறுவனம் வைத்த கோரிக்கை வைத்தது. இதை ஏற்ற நீதிமன்றம் 'கும்கி 2' படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளது.




