கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் |

மாமன் படத்தை அடுத்து தற்போது மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார் சூரி. மதிமாறன் புகழேந்தி என்பவர் இயக்கும் இப்படத்தில் சூரியுடன் சுகாஸ், மகிமா நம்பியார், பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.
இந்த நிலையில், தனது இணையப்பக்கத்தில் நடிகர் அஜித்குமாரை சந்தித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ஒரு பதிவு போட்டு உள்ளார் சூரி. அந்த பதிவில், ‛‛அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதில்லை. அது தினமும் உழைப்பாலும் மன வலிமையாலும் சம்பாதிக்கப்படுகிறது. அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது'' என்று பதிவிட்டுள்ளார்.