பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக நாடு ஒரு இக்கட்டான சூழலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சில நடிகைகள் அவர்களது சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருவது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இன்னும் சில நடிகைகளோ கொரோனா பரவல் குறித்து 'அட்வைஸ்' பதிவுகளைப் போட்டுவிட்டு மாலத் தீவிற்கு ஓய்வெடுக்கச் செல்வது குறித்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
சில சீனியர் சினிமா பிரபலங்கள் இறந்த போது கூட சில நடிகைகள் பிறந்தநாளைக் கொண்டாடுவதும், அன்றைய தினங்களில் கூட கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருப்பதாகவும் சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். குறைந்தபட்சம் அந்த ஒரு நாளைக்காவது அவர்களது கொண்டாட்டங்களைத் தள்ளி வைக்கலாமே என்றும் சொல்கிறார்கள்.
இது பற்றி சில பெண் பிரபலங்கள் கூட அவர்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்கள். சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை ஸ்ருதிஹாசன் இது பற்றி கூறுகையில், “பலர் அவர்களது விடுமுறையைக் கொண்டாடி வருகிறார்கள். அவர்கள் அதைச் செய்யலாம், ஆனால், தற்போது பலருக்கும் ஒரு கடினமான சூழலே உள்ளது. நம்முடைய கொண்டாட்டங்கள் மற்றவர்களது உணர்வுகளை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் இன்னம் பிரபலமாகாத சில தமிழ் நடிகைகள், டிவி நடிகைகள்தான் இப்படி கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.