சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் | நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் | உதவி செய்பவர்களை காயப்படுத்தாதீர்கள்: 'துள்ளுவதோ இளமை' அபிநய் |
கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக நாடு ஒரு இக்கட்டான சூழலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சில நடிகைகள் அவர்களது சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருவது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இன்னும் சில நடிகைகளோ கொரோனா பரவல் குறித்து 'அட்வைஸ்' பதிவுகளைப் போட்டுவிட்டு மாலத் தீவிற்கு ஓய்வெடுக்கச் செல்வது குறித்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
சில சீனியர் சினிமா பிரபலங்கள் இறந்த போது கூட சில நடிகைகள் பிறந்தநாளைக் கொண்டாடுவதும், அன்றைய தினங்களில் கூட கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருப்பதாகவும் சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். குறைந்தபட்சம் அந்த ஒரு நாளைக்காவது அவர்களது கொண்டாட்டங்களைத் தள்ளி வைக்கலாமே என்றும் சொல்கிறார்கள்.
இது பற்றி சில பெண் பிரபலங்கள் கூட அவர்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்கள். சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை ஸ்ருதிஹாசன் இது பற்றி கூறுகையில், “பலர் அவர்களது விடுமுறையைக் கொண்டாடி வருகிறார்கள். அவர்கள் அதைச் செய்யலாம், ஆனால், தற்போது பலருக்கும் ஒரு கடினமான சூழலே உள்ளது. நம்முடைய கொண்டாட்டங்கள் மற்றவர்களது உணர்வுகளை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் இன்னம் பிரபலமாகாத சில தமிழ் நடிகைகள், டிவி நடிகைகள்தான் இப்படி கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.