நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. தெலுங்கில் அவர் வில்லனாக நடித்து வெளிவந்த 'உப்பெனா' படம் பெரிய வசூல் சாதனையைப் படைத்தது. அதற்கு முன்பு வெளியான 'மாஸ்டர்' படத்தின் மூலமும் தெலுங்கு ரசிகர்களிடம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. சிரஞ்சீவி நடித்த 'சைரா' படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அங்கு அறிமுகமானவர் விஜய் சேதுபதி.
'உப்பெனா' படத்திற்குப் பிறகு அவரைத் தேடி பல வாய்ப்புகள் வருகிறதாம். ஆனால், அவற்றை ஒத்துக் கொள்ள மறுத்து வருகிறாராம். “தற்போது தெலுங்கு கற்று வருகிறேன். அதில் நன்றாக பேச ஆரம்பித்ததும், தெலுங்கில் அதிகம் நடிக்கிறேன்,” என அவரைத் தேடி வரும் தெலுங்குத் திரையுலகினரிடம் தெரிவிக்கிறாராம்.
விஜய் சேதுபதி தற்போது 'மும்பை சகா' என்ற ஹிந்திப் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள முக்கிய நடிகர்களில் சீக்கிரமே 'பான் இந்தியா' நடிகராக மாறிவிடுவார் போலிருக்கிறது.