பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. தெலுங்கில் அவர் வில்லனாக நடித்து வெளிவந்த 'உப்பெனா' படம் பெரிய வசூல் சாதனையைப் படைத்தது. அதற்கு முன்பு வெளியான 'மாஸ்டர்' படத்தின் மூலமும் தெலுங்கு ரசிகர்களிடம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. சிரஞ்சீவி நடித்த 'சைரா' படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அங்கு அறிமுகமானவர் விஜய் சேதுபதி.
'உப்பெனா' படத்திற்குப் பிறகு அவரைத் தேடி பல வாய்ப்புகள் வருகிறதாம். ஆனால், அவற்றை ஒத்துக் கொள்ள மறுத்து வருகிறாராம். “தற்போது தெலுங்கு கற்று வருகிறேன். அதில் நன்றாக பேச ஆரம்பித்ததும், தெலுங்கில் அதிகம் நடிக்கிறேன்,” என அவரைத் தேடி வரும் தெலுங்குத் திரையுலகினரிடம் தெரிவிக்கிறாராம்.
விஜய் சேதுபதி தற்போது 'மும்பை சகா' என்ற ஹிந்திப் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள முக்கிய நடிகர்களில் சீக்கிரமே 'பான் இந்தியா' நடிகராக மாறிவிடுவார் போலிருக்கிறது.