சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி | முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? | தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம் | 20 கோடி கடன் வரவில்லை.. யாரும் போன் எடுக்கலை..: கே. ராஜன் பற்றி அவர் குடும்பத்தினர் | ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்! | ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்! | கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் |

'அசுரன்' படத்திற்குப் பிறகு தனுஷ் மீதான விமர்சனப் பார்வை மாறிவிட்டது. மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தும் இன்றைய இளம் நடிகர்களில் இவர்தான் முன்னணியில் இருக்கிறார்.
சமீபத்தில் வெளிவந்த 'கர்ணன்' படமும் தனுஷ் மீதான இமேஜ் மேலும் வளரக் காரணமாக இருந்தது. இனி, அவர் சாதாரண கமர்ஷியல் படங்களில் நடித்தால் பொருத்தமாக இருக்காது என பலரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
தற்போது ஹாலிவுட்டில் 'தி கிரே மேன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். அங்கிருந்தபடியே மீண்டும் 'கர்ணன்' படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜுடன் புதிய படத்தில் நடிக்க உள்ளேன் என்று அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் சில நாட்கள் நடித்துள்ளார் தனுஷ். அடுத்து 'மாரி' பட இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்திலும் ஒரு புதிய படத்தில் நடித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இவற்றோடு அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' என்ற படத்திலும் நடிக்க உள்ளார். 2024ம் ஆண்டில் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் 'ஆயிரத்தில் ஒருவன் 2' படத்தில் நடிக்கப் போகிறார்.
இவை தவிர, தற்போது 'அத்ராங்கி ரே' என்ற ஹிந்திப் படத்திலும் நடித்து முடித்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' படம் ஜுன் மாதம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
அடுத்த சில ஆண்டுகளுக்கான தன்னுடைய படங்கள் எவையெவை என்பது பற்றி தனுஷ் தெளிவாக முடிவெடுத்துவிட்டார் என திரையுலகத்தில் சொல்கிறார்கள்.