பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
பழம்பெரும் நடிகர் பெரியகருப்பு தேவர், சென்னையில் நேற்று, மாரடைப்பால் இறந்தார். இவருக்கு வயது,78. " பூ, விருமாண்டி, சிவகாசி, திருப்பாச்சி உட்பட, 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கலைமாமணி விருது பெற்றுள்ளார். சென்னை சாலிகிராமத்தில், அவர் வீட்டில், நேற்று மாலை, 4:00 மணிக்கு, மாரடைப்பால் இறந்தார். இவர் உடலுக்கு, திரையுலகத்தினர் பலர், அஞ்சலி செலுத்தினர். இவருக்கு, அன்னம்மாள் என்ற மனைவியும், நான்கு மகன்களும் உள்ளனர். பெரியகருப்பு தேவரின் உடல், சென்னையிலிருந்து நேற்று இரவு, அவரது சொந்த ஊரான, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள, கருமாத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று, இறுதிச் சடங்கு நடக்கிறது.