'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கடந்த 2015ம் ஆண்டு நயன்தாரா கதையின் நாயகியாக நடித்த அறம் என்ற படத்தை இயக்கியவர் கோபி நயினார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவர் அகரம் காலனி என்றொரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு அரிசி ஆலையில் நடைபெற்று வந்தது. அப்போது அகரம் காலனி படத்தின் லைட்மேன் சண்முகம் என்பவர் எதிர்பாராத விதமாக படப்பிடிப்பு தளத்தில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார். அதையடுத்து அவரை படக்குழுவினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்கள். இந்த சம்பவத்தை அடுத்து சண்முகத்தின் உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.