பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

மாவீரன் படத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 21வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஏற்கனவே ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடித்துள்ள அயலான் படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏலியனை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. நீண்டகால தயாரிப்பில் இருந்த இந்த படம் ஒருவழியாக வெளியீட்டிற்கு தயாராகிவிட்டது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன், இயக்குனர் ரவிக்குமார், ஏ. ஆர்.ரகுமான், இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
சிவகார்த்திகேயன் பேசுகையில், ‛‛எனக்கு சினிமாவில் அவரை முந்த வேண்டும் இவரை முந்த வேண்டும் என்ற எந்த போட்டி மனப்பான்மையும் கிடையாது. என்னால் முடிந்த நல்ல படங்களை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று மட்டுமே ஆசைப்படுகிறேன். இந்த படத்தின் தயாரிப்பாளர் அயலான் படத்தை தெலுங்கில் ஒரு பாகுபலி, கன்னடத்தில் ஒரு கேஜிஎப் மாதிரி தமிழில் ஒரு அயலான் என்று கூறினார்.
இந்த படத்தின் இயக்குனர் மீதும் அயலான் படத்தின் மீது கொண்ட நம்பிக்கையில் அவர் பேசுகிறார். அதோடு ரத்தம், துப்பாக்கி சத்தம் ஆகியவற்றை நான் விரும்பவில்லை அயலான் படத்தில் ரத்தம் துப்பாக்கி ஆகியவற்றை நம்பாமல் ஏலியனை நம்பி படம் எடுத்திருக்கிறோம். தமிழில் உருவாகும் ஒரு நல்ல படமாக இந்த படம் கண்டிப்பாக இருக்கும். ஆரம்ப காலத்தை போன்று இப்போது நான் காதல் கதைகளில் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும் அது போன்ற கதைகளில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கிறது. அதுபோன்ற கதைகளையும் கேட்டு வருகிறேன்'' என்றார்.




