பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, இசையமைப்பதுடன் ஏற்கெனவே தயாரிப்பாளர் ஆகவும் மாறிவிட்டார். அவர் முதலில் தயாரித்த 'பியார் பிரேமா காதல்' படம் வணிக ரீதியாக வெற்றிப் படமாக அமைந்தது. அடுத்து ஒரே சமயத்தில் இரண்டு படங்களை அவர் தயாரிக்க ஆரம்பித்துள்ளார். இரண்டு படங்களிலும் விஜய் சேதுபதி தான் கதாநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.
'பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி' படங்களை இயக்கிய அருண்குமார் ஒரு படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார். 'இறைவி' படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி, அஞ்சலி மீண்டும் இணைந்து நடிக்கும் படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் ஆரம்பமாகியுள்ளது.
மற்றொரு படத்தை சீனு ராமசாமி இயக்குகிறார். 'தென்மேற்குப் பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை' ஆகிய படங்களுக்குப் பிறகு சீனு ராமசாமி, விஜய் சேதுபதி மீண்டும் இணையும் படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முதல் ஆரம்பமாகிறது.
யுவன் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதித்திருப்பது திரையுலகத்தில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு இயக்குனர்களுமே விஜய் சேதுபதியின் மனம் கவர்ந்தவர்கள். அவருடைய சிபாரிசின் பேரில் தான் யுவன் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதாக கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.