பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பிஸியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமல்லாது வில்லனாகவும் அசத்தி வருகிறார். தற்போது குரங்கு பொம்மை பட இயக்குனர் நிதிலன் இயக்கத்தில் தனது 50வது படத்தில் நடித்து வருகிறார்.
அனுராக் காஷ்யப், நட்டி (நட்ராஜ்), மம்தா மோகன்தாஸ், அபிராமி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன், சரவணன் சுப்பையா, எஸ்.எஸ்.ஸ்டான்லி, கல்கி, காளையன் மற்றும் இன்னும் பலர் நடிக்கிறார்கள். காந்தாரா பட இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இசை அமைக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இதுநாள் வரை படத்திற்கு டைட்டில் வைக்காமலே படப்பிடிப்பு நடத்தி வந்தனர். இப்போது மகாராஜா என்று தலைப்பு வைத்துள்ளதாக படக்குழுவினர் டைட்டில் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.