இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் |
பிரபல மலையாள நாவலாசிரியர் சி.வி.பாலகிருஷ்ணன் எழுதிய காமமோகிதம் என்கிற நாவலை படமாக்க மறைந்த இயக்குனர் பரதன் உள்ளிட்டட சில இயக்குனர்கள் முயற்சி எடுத்து வந்தனர். ஆனால் அவர்கள் எல்லோருமே இந்த நாவலில் இடம்பெறும் ஜஜாலி மற்றும் சாகர தத்தன் என இரண்டு முக்கிய கதாபாத்திரங்களில் மம்முட்டி, மோகன்லாலை மட்டுமே கற்பனை செய்து வைத்திருந்தனர்.
அதேசமயம் கே.ஜி .ஜார்ஜ் என்பவர் மம்முட்டி, மோகன்லால் இருவரையும் வைத்து இதை ஆரம்பிக்கும் பணிகளில் இறங்கினார்.. ஆனால் சில காரணங்களால் அது கைவிடப்பட்டது. மறைந்த இயக்குனர் பத்ரன், இந்த இரண்டு கேரக்டர்களிலும் மோகன்லாலை நடிக்க வைத்து இந்தப்படத்தை உருவாக்க ஒரு முயற்சி எடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனாலும் இந்த முயற்சிகள் எதுவும் முன்னோக்கி நகரவில்லை. இந்தநிலையில் மம்முட்டியும் இதன் நாவலாசிரியர் சி.வி.பாலகிருஷ்ணனும் இணைந்த புகைப்படம் ஒன்று டிவிட்டரில் வெளியாகி, இந்தப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தப்படம் தற்போது மம்முட்டியின் கைகளுக்கு மாறியுள்ளது உறுதியாகியுள்ளது.