ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல மலையாள நாவலாசிரியர் சி.வி.பாலகிருஷ்ணன் எழுதிய காமமோகிதம் என்கிற நாவலை படமாக்க மறைந்த இயக்குனர் பரதன் உள்ளிட்டட சில இயக்குனர்கள் முயற்சி எடுத்து வந்தனர். ஆனால் அவர்கள் எல்லோருமே இந்த நாவலில் இடம்பெறும் ஜஜாலி மற்றும் சாகர தத்தன் என இரண்டு முக்கிய கதாபாத்திரங்களில் மம்முட்டி, மோகன்லாலை மட்டுமே கற்பனை செய்து வைத்திருந்தனர்.
அதேசமயம் கே.ஜி .ஜார்ஜ் என்பவர் மம்முட்டி, மோகன்லால் இருவரையும் வைத்து இதை ஆரம்பிக்கும் பணிகளில் இறங்கினார்.. ஆனால் சில காரணங்களால் அது கைவிடப்பட்டது. மறைந்த இயக்குனர் பத்ரன், இந்த இரண்டு கேரக்டர்களிலும் மோகன்லாலை நடிக்க வைத்து இந்தப்படத்தை உருவாக்க ஒரு முயற்சி எடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனாலும் இந்த முயற்சிகள் எதுவும் முன்னோக்கி நகரவில்லை. இந்தநிலையில் மம்முட்டியும் இதன் நாவலாசிரியர் சி.வி.பாலகிருஷ்ணனும் இணைந்த புகைப்படம் ஒன்று டிவிட்டரில் வெளியாகி, இந்தப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தப்படம் தற்போது மம்முட்டியின் கைகளுக்கு மாறியுள்ளது உறுதியாகியுள்ளது.