துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
பாகுபலி படத்தில் நடித்த பிறகு பிரபாஸ், அனுஷ்கா காதல் குறித்த செய்திகள் வெளியானபோது அதை அவர்கள் இருவரும் மறுத்தார்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே என்று கூறினார்கள். இந்த நிலையில் தற்போது 43 வயதாகும் அனுஷ்கா, திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். தற்போது காட்டி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
அனுஷ்கா அளித்துள்ள ஒரு பேட்டியில், தனது பள்ளி பருவத்தில் ஏற்பட்ட ஒரு காதல் சம்பவத்தை பகிர்ந்து கொண்டு உள்ளார். அதில், ‛‛நான் ஆறாவது படிக்கும் போது, என்னுடன் படித்த ஒரு மாணவன் என்னை காதலிப்பதாக கூறினான். உயிருக்கு உயிராக நேசிப்பதாகவும் கூறினான். அப்போது காதல் என்றாலே எனக்கு என்னவென்று தெரியாது. என்றாலும் அவன் காதலை ஏற்றுக் கொண்டேன். காதல் என்றால் என்னவென்றே புரியாத வயதில் நடந்த அந்த காதல் அனுபவத்தை இப்போது வரை என் வாழ்க்கையில் நடந்த ஒரு இனிய அனுபவமாக பாதுகாத்து வருகிறேன்'' என்று கூறியுள்ளார் அனுஷ்கா.