தமிழ் சினிமாவில் தொடரும் 1000 கோடி கனவு | ‛சூ ப்ரம் சோ' கன்னட படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பும் அஜய் தேவ்கன் | இனி, நடிப்புக்கு முழுக்கு: சமந்தா பிளான் | மருமகனுக்காக மாமா படம் தயாரிப்பாரா? | 2 வருடங்களுக்கு முன் காணாமல் போன மெமரி கார்டை கண்டுபிடிக்க சிறப்பு குழுவை நியமித்த ஸ்வேதா மேனன் | ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் |
தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் பாடலாசிரியர் சிவசக்தி தத்தா. இவர் பிரபல இசைமையப்பாளரும், ஆஸ்கர் வென்றவருமான கீரவாணியின் தந்தை. சிவசக்தி தத்தாவின் மூத்த சகோதரர் பெயர் எழுத்தாளர் விஜேயந்திர பிரசாத். இவர் பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியின் தந்தை ஆவார். ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' படத்துக்கும், 'ஆர்ஆர்ஆர்' படத்துக்கும் இசையமைத்தவர் கீரவாணி. இதில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் பாடலுக்கு தான் ஆஸ்கர் வென்றிருந்தார் கீரவாணி.
வயோதிகம் காரணமாக சிவசக்தி தத்தா இன்று காலமானார். அவரின் மறைவை அறிந்த டோலிவுட் உலகம், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி தமது இரங்கலை வெளியிட்டு உள்ளார்.
மறைந்த சிவசக்தி தத்தா பாடலாசிரியராக மட்டுமல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்தவர். தெலுங்கு சினிமா உலகில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். சிவசக்தி தத்தாவின் இறுதிச்சடங்கு எப்போது நடைபெறும் என்ற விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.