பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ் சீசன் 2' நிகழ்ச்சியில் 66 நாட்களுக்குப் பிறகு 'வைல்டு கார்டு என்ட்ரி' நிகழ்த்தப்பட்டுள்ளது. 'சென்னை 28 முதல் பாகம், இரண்டாம் பாகம், அஞ்சாதே, சரோஜா, வெண்ணிலா வீடு' போன்ற படங்களில் நடித்த விஜயலட்சுமி தான் வைல்டு கார்டு நுழைவாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். இது பற்றிய அறிவிப்பை டுவிட்டரிலேயே வெளியிட்டுவிட்டார்கள்.
கடந்த சீசனில் 35வது நாளில் நடைபெற்ற வைல்டு கார்டு நுழைவு இந்த சீசனில் 67வது நாளில் நடைபெறுவது ஆச்சரியமாக உள்ளது. நிகழ்ச்சி முடிய இன்னும் 33 நாட்களே உள்ள நிலையில் இப்போது எதற்கு வைல்டு கார்டு நுழைவு என ரசிகர்களும் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
'நாயகி' தொடரில் நாயகியாக நடித்து வந்த விஜயலட்சுமி திடீரென அந்தத் தொடரிலிருந்து விலகினார். அதற்கான காரணத்தை விலகிய போது அவர் சொல்லவில்லை. ஒருவேளை 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்காகத்தான் அவர் விலகினாரா என்பதும் தெரியவில்லை. ஒரு குழந்தைக்குத் தாயான பின் ஒரு வயதான குழந்தையை விட்டுப் பிரிந்து 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் விஜயலட்சுமி கலந்து கொள்வதின் காரணமும் புரியாத புதிர்தான்.