பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது என கடந்த சீசனிலேயே நிறைய புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக இந்த நிகழ்ச்சி மீது போலீசில் புகாரும் கொடுக்கப்பட்டன. தற்போது இதன் இரண்டாவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் இந்தவாரம் சர்வாதிகாரி டாஸ்க் என்று ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை குறிப்பது போன்று உள்ளது என்று கூறி சென்னையை சேர்ந்த வக்கில் லூயிசாள் ரமேஷ் என்பவர், கமல் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இந்த நிகழ்ச்சிக்கு தடை கோரியும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.
லூயிசாள் ரமேஷ் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது...
விஜய் டிவியில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி கடந்த 40 நாட்களாக ஒளிப்பரப்பாகி வருகிறது. கமல் தனது மக்கள் நீதி மையத்தின் கட்சியை வளர்க்க எடுத்துள்ள யுக்தி தான் இந்த நிகழ்ச்சி. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் விதமாக தொடர்ந்து பேசி வருகிறார்.
இவருடைய ஏற்பாட்டின் படி இந்தவாரம் சர்வாதிகாரி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா, சர்வாதிகாரியாக நடிக்கிறார். இவர் போட்டியில் பங்கேற்றுள்ளவர்களை கொடுமைப்படுத்தும் பல்வேறு செயல்களை செய்கிறார். இந்த டாஸ்க்கில் என்ன பேச வேண்டும், என்ன செய்ய வேண்டும் என முன்கூட்டியே இந்த தொடரை நடத்தும் எண்டாமல்சைன் இந்தியா நிறுவனமும், கமலும் கூறுகின்றனர். அதைத்தான் இவர்கள் நடித்து காட்டுகின்றனர்.
ஜூலை 31 அன்று ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் ரித்விகா என்ற போட்டியாளர், "இந்த டாஸ்க் வடநாட்டிலிருந்து வந்த ஐஸ்வர்யாவிற்கு தெரியாது, தமிழ்நாட்டில் இதற்கு முன் சர்வாதிகாரி ஆட்சி செய்தவர்களின் நிலைமை என்ன ஆச்சு என இவர்களுக்கு தெரியாது" என கூறுகிறார். இந்த டாஸ்க் முடிந்தவுடன் கமலும், சனிக்கிழமை அன்று, தமிழகத்தில் சர்வாதிகாரி போன்று ஆட்சி நடத்தியவர்கள் என்ன ஆனார்கள் என்பது போல பேசுவார்.
தமிழகத்தை அமைதி பூங்காவாக ஆட்சி நடத்திய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக, சர்வாதிகாரி போன்று சித்தரித்து நடத்தி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தடை செய்வதோடு, நடிகர் கமல்ஹாசன் மற்றும் இந்த நிகழ்ச்சியை தயாரிக்கும் எண்டாமல்சைன் இந்தியா நிறுவனத்தின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.