கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

'மதுபானக்கடை' படத்தின் மூலம் அறியப்பட்டவர் கமலக்கண்ணன். அதன்பிறகு 'வட்டம்' என்ற படத்தை இயக்கினார். அது பெரிதாக பேசப்படவில்லை. தற்போது அவர் இயக்கி உள்ள படம் 'குரங்கு பெடல்'. இது ராசி அழகப்பன் எழுதிய 'சைக்கிள்' என்ற சிறுகதையை தழுவி உருவாகி உள்ளது. இதில் காளி வெங்கட், சந்தோஷ் வேலுமுருகன், வி.ஆர்.ராகவன், எம்.ஞானசேகர் உட்பட பலர் நடித்துள்ளனர். மாண்டேஜ் பிக்சர்ஸ் சார்பில் சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன் தயாரித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குநர் கமலக்கண்ணன் கூறும்போது, “சைக்கிள் ஓட்டத் துடிக்கும் மகனுக்கும் அவன் தந்தைக்குமான பிணைப்பைச் சொல்லும் படம் இது. 80 மற்றும் 90களில் அரைபெடல் போட்டு சிறுவர்கள் சைக்கிள் கற்றுக்கொள்வது வழக்கம். இது அதைச் சுற்றிப் பேசும் படம் . காவேரி கரையோரத்தில் கத்தேரி என்ற கற்பனை கிராமத்தில் நடப்பது போல கதை உருவாக்கப்பட்டுள்ளது. உணர்வுபூர்வமான தொடர்பை இந்தப் படம் கொடுக்கும்.
இந்த காலத்தில் ஒரு வயது முதல் ஓட்டக்கூடிய சைக்கிள் வந்து விட்டதால் இந்த அரை பெடல் அனுபவம் சிறுவர்களுக்கு கிடைப்பதில்லை. இப்படியான ஒரு கதை சூழலில் 80 மற்றும் 90களுக்கு இடையில் இருந்து கவித்துவமான வாழ்க்கையை சொல்லும் படம்.
பொதுவாக குழந்தைகளுக்கு பொம்மைகளுக்கு அடுத்தபடியாக ஈர்ப்பை தருவது சைக்கிள்தான். அதுவும் 80ஸ் கிட்ஸ்களுக்கு சைக்கிள் பெரும் கனவாக இருந்தது. அதை பற்றிய படம் இது. இந்த படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் தனது நிறுவனத்தின் சார்பில் படத்தை வெளியிட முன்வந்துள்ளார்” என்றார்.