புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு நடிகர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் சூர்யா, கார்த்தி இருவரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
சூர்யா கூறியதாவது... "மக்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு ஆரம்பத்திலேயே பிரச்னையை அரசு தீர்க்க வேண்டும். போராட்டத்தில் வன்முறை கூடாது, போராடுவதே வன்முறை ஆகிவிடாது .மக்கள் தேவைகளை தீர்த்து வைக்கிற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என கூறியுள்ளார்.
கார்த்தி கூறுகையில், "எவ்வித அரசியல் தலையீடுகளுக்கும் இடம் கொடுக்காமல் தன்னெழுச்சியாக திரண்ட மக்களைக் கொஞ்சமும் ஈவு இரக்கமற்று சுட்டுக் கொன்றிருப்பது நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா என்கிற கேள்வியை எழுப்பி இருக்கிறது. மண்ணுக்கு மக்களுக்குமான போராட்டத்தில் உயிர்விட்ட ஒவ்வொருவருக்கும் என் அஞ்சலியை செலுத்துகிறேன். சுற்றுச்சூழலை காக்க உயிர்விட்ட அத்தனை பேரையும் அவர்களுடைய தியாகத்தையும் நாளைய வரலாறு கல்வெட்டு கணக்காக நினைவில் வைத்திருக்கும்" என கூறியுள்ளார்.