பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
பிரேமம் சாய் பல்லவி, பிடா படத்தில் நடித்து தெலுங்கிலும் முன்னணி நடிகையாகி விட்டார். அதைத் தொடர்ந்து ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள கரு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் நடித்து வரும்போதே தனுசுடன் மாரி-2, சூர்யாவின் என்ஜிகே ஆகிய படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார் அவர்.
இந்த நிலையில், அடுத்தபடியாக ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திலும் சாய் பல்லவியை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்துள்ளது. சாய்பல்லவியும் ஒப்புதல் அளித்து விட்டாராம். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்கிறார்கள். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.