அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் | விஜய் சேதுபதி நடித்த ஸ்லம்டாக் தமிழ் படமா? டப்பிங்கா? | காக்டெயில் 2 படத்தில் நடிக்க பயந்தேன் : ராஷ்மிகா மந்தனா | 10 வருடத்திற்கு பிறகு ‛பரிமளா அண்ட் கோ'வில் மீண்டும் கதகளி ஆடிய பாண்டிராஜ் | ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும் : நுாறுசாமி குறித்து இயக்குனர் சசி | கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி |

நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த சில வருடங்களாக தனது எஸ்.கே.புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலம் படங்களைக் தயாரித்து வருகிறார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, வாழ், கனா ஆகிய படங்களைக் தயாரித்துள்ளார். தற்போது நடிகர் சூரியை வைத்து 'கொட்டுக்காளி' என்கிற படத்தை எடுத்துள்ளார். இந்தப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விருது விழாக்களில் பங்கேற்று வருகிறது.
இந்நிலையில் இப்போது கமலக்கண்ணன் சுப்பிரமணியன் என்பவர் இயக்கத்தில் 'குரங்கு பெடல்' என்கிற வித்தியாசமான படத்தை தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். காளி வெங்கட் பிரதான வேடத்தில் நடித்துள்ளார். சைக்கிள் மற்றும் சிறுவனை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தின் முதல்பார்வை வெளியாகி உள்ளது.