ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி |

நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த சில வருடங்களாக தனது எஸ்.கே.புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலம் படங்களைக் தயாரித்து வருகிறார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, வாழ், கனா ஆகிய படங்களைக் தயாரித்துள்ளார். தற்போது நடிகர் சூரியை வைத்து 'கொட்டுக்காளி' என்கிற படத்தை எடுத்துள்ளார். இந்தப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விருது விழாக்களில் பங்கேற்று வருகிறது.
இந்நிலையில் இப்போது கமலக்கண்ணன் சுப்பிரமணியன் என்பவர் இயக்கத்தில் 'குரங்கு பெடல்' என்கிற வித்தியாசமான படத்தை தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். காளி வெங்கட் பிரதான வேடத்தில் நடித்துள்ளார். சைக்கிள் மற்றும் சிறுவனை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தின் முதல்பார்வை வெளியாகி உள்ளது.