பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
பாலாவின் படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றாலும் வசூல் பெரிய அளவில் பேசப்படாது. இதற்கு மாறாக 'நாச்சியார்' படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு சில கோடிகள் லாபம் கிடைத்துள்ளது. அவர் வேறு யாருமல்ல, பாலாவேதான்.
தன்னுடைய சொந்தப்படம் என்பதால் நாச்சியார் படத்தை திட்டமிட்டபடி 58 நாட்களில் எடுத்து முடித்து சிக்கனமாக செலவு செய்தார். இயக்குனர் பாலா தனது அடுத்த படமான 'வர்மா'வின் படப்பிடிப்பை தொடங்கி விட்டார்.
பாலா இயக்கத்தில் குறுகிய நாட்களில் உருவாகி வெளியான 'நாச்சியார்' படத்தை போலவே 'வர்மா'வின் படப்பிடிப்பையும் குறுகிய நாட்களில் நடத்தி முடிப்பாரா பாலா என்ற கேள்வி படத்துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
விக்ரம் மகன் துருவ் நடிக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பிற்காக பாலா, துருவ், ஒளிப்பதிவாளர் சுகுமார் ஆகியோர் நேபால் நாட்டின் தலைநகரான, காத்மண்டுக்கு சென்றுள்ளனர். அங்கு 'வர்மா'வின் படப்பிடிப்பு துவங்கி முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
தெலுங்கில் வெளியாகி வசூல் குவித்த 'அர்ஜுன் ரெட்டி'யின் ரீ-மேக்காக உருவாகும் 'வர்மா'வுக்கு 'ஜோக்கர்' ராஜு முருகன் வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தில் யார் கதாநாயகியாக நடிக்கிறார். யார் இசை அமைக்கிறார் என்ற தகவல்களை பாலா இன்னும் வெளியிடவில்லை.