64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! | பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் | 10 கோடிக்கு கார் வாங்கிய அட்லி | பிளாஷ்பேக்: தமிழில் ரீமேக் ஆன சார்லி சாப்ளின் படம் | பிளாஷ்பேக்: சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கிய “ஆராய்ச்சி மணி” |

தெலுங்கு இயக்குனரான ராம் கோபால் வர்மா சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவ்வாக இருப்பவர். சினிமா மட்டுமல்லாது அரசியல் குறித்தும் அடிக்கடி கிண்டல் செய்து பதிவுகளைப் போடுவார். குறிப்பாக தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சித் தலைவர், நடிகர் பவன் கல்யாண் ஆகியோரைக் கடுமையாக விமர்சிப்பார்.
நடைபெற்று முடிந்த தெலங்கானா சட்டசபைத் தேர்தலில் பவன் கல்யாண் கட்சி 8 இடங்களில் போட்டியிட்டது. அதில் ஒரு இடத்தில் கூட டெபாசிட் பெறவில்லை. இது தெலங்கானாவில் பவனின் அரசியல் வாழ்க்கைக்கு மேலும் கேள்விக்குறியாகி உள்ளது. ஆந்திர அரசியலில் மட்டுமே அதிக கவனம் செலுத்துபவர் பவன் கல்யாண். அடுத்து நடைபெற உள்ள ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து அரசியல் வட்டாரங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
இதனிடையே, தெலங்கானா அரசியலில் படுதோல்வி அடைந்த பவன் கல்யாண் குறித்து இயக்குனர் ராம்கோபால் வர்மா கிண்டலடித்துள்ளார். “கணிதத்தில் ஆர்யபட்டா ஜீரோவைக் கண்டுபிடித்தார். அரசியலில் பவன் கல்யாண் ஜீரோவைக் கண்டுபிடித்துள்ளார்,” என பதிவிட்டுள்ளார். இதனால், அவர் மீது பவன் கல்யாண் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.