மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
தெலுங்கு இயக்குனரான ராம் கோபால் வர்மா சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவ்வாக இருப்பவர். சினிமா மட்டுமல்லாது அரசியல் குறித்தும் அடிக்கடி கிண்டல் செய்து பதிவுகளைப் போடுவார். குறிப்பாக தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சித் தலைவர், நடிகர் பவன் கல்யாண் ஆகியோரைக் கடுமையாக விமர்சிப்பார்.
நடைபெற்று முடிந்த தெலங்கானா சட்டசபைத் தேர்தலில் பவன் கல்யாண் கட்சி 8 இடங்களில் போட்டியிட்டது. அதில் ஒரு இடத்தில் கூட டெபாசிட் பெறவில்லை. இது தெலங்கானாவில் பவனின் அரசியல் வாழ்க்கைக்கு மேலும் கேள்விக்குறியாகி உள்ளது. ஆந்திர அரசியலில் மட்டுமே அதிக கவனம் செலுத்துபவர் பவன் கல்யாண். அடுத்து நடைபெற உள்ள ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து அரசியல் வட்டாரங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
இதனிடையே, தெலங்கானா அரசியலில் படுதோல்வி அடைந்த பவன் கல்யாண் குறித்து இயக்குனர் ராம்கோபால் வர்மா கிண்டலடித்துள்ளார். “கணிதத்தில் ஆர்யபட்டா ஜீரோவைக் கண்டுபிடித்தார். அரசியலில் பவன் கல்யாண் ஜீரோவைக் கண்டுபிடித்துள்ளார்,” என பதிவிட்டுள்ளார். இதனால், அவர் மீது பவன் கல்யாண் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.