பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதையடுத்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51வது படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் .ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நாகர்ஜூனா நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
கடந்த சில வருடங்களாக இதன் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் அரசியல் மாபியா கதை களத்தை மையப்படுத்தி உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் மும்பையில் தொடங்கவுள்ளனர். படப்பிடிப்பின் போதே இந்த படத்தின் காட்சிகளைக் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் படமாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.