தங்கலான் படப்பிடிப்பிற்கு பிறகு 5 வித மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றேன் : மாளவிகா மோகனன் | 'கொட்டுக்காளி' விருதுக்காக எடுக்கப்பட்ட படமா? - இயக்குனர் விளக்கம் | குழந்தை நட்சத்திரங்கள் வளர காத்திருந்தது ஏன்? - ஹலிதா ஷமீம் விளக்கம் | இரண்டே மாதத்தில் முடிந்த ரியோ படம் | அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் | தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் |
தமிழ்நாட்டில் பிறந்து, மலையாளத்தில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சாய்பல்லவி. அடுத்து கன்னட சினிமாவில் கால் பதிக்கிறார். அதுவும் முதல் படமாக கன்னட சினிமாவின் வசூல் மன்னன் யஷ் ஜோடியாக நடிக்கிறார்.
இந்த படத்தை மலையாள நடிகையும், இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இவர் ஏராளமான மலையாள படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இந்த படத்தை இயக்க உள்ளார்.
இந்த படம் கோவாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கேங்ஸ்டர் கதை என்று சொல்லப்படுகிறது. கன்னடத்தில் தயாரானாலும் பான் இந்தியா படமாக உருவாகிறது. படம் பற்றிய விரிவான அறிவிப்புகள் நாளை (8ம் தேதி) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.