என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழ்நாட்டில் பிறந்து, மலையாளத்தில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சாய்பல்லவி. அடுத்து கன்னட சினிமாவில் கால் பதிக்கிறார். அதுவும் முதல் படமாக கன்னட சினிமாவின் வசூல் மன்னன் யஷ் ஜோடியாக நடிக்கிறார்.
இந்த படத்தை மலையாள நடிகையும், இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இவர் ஏராளமான மலையாள படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இந்த படத்தை இயக்க உள்ளார்.
இந்த படம் கோவாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கேங்ஸ்டர் கதை என்று சொல்லப்படுகிறது. கன்னடத்தில் தயாரானாலும் பான் இந்தியா படமாக உருவாகிறது. படம் பற்றிய விரிவான அறிவிப்புகள் நாளை (8ம் தேதி) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.