நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ்நாட்டில் பிறந்து, மலையாளத்தில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சாய்பல்லவி. அடுத்து கன்னட சினிமாவில் கால் பதிக்கிறார். அதுவும் முதல் படமாக கன்னட சினிமாவின் வசூல் மன்னன் யஷ் ஜோடியாக நடிக்கிறார்.
இந்த படத்தை மலையாள நடிகையும், இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இவர் ஏராளமான மலையாள படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இந்த படத்தை இயக்க உள்ளார்.
இந்த படம் கோவாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கேங்ஸ்டர் கதை என்று சொல்லப்படுகிறது. கன்னடத்தில் தயாரானாலும் பான் இந்தியா படமாக உருவாகிறது. படம் பற்றிய விரிவான அறிவிப்புகள் நாளை (8ம் தேதி) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.