எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா | புதையல் கதையில் நாக சைதன்யா |
பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸி தம்பதியின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். தற்போது தென்னிந்திய சினிமாவில் இளம் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களில் இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்த படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்யாணி கதாநாயகியாக நடித்துள்ள ஆண்டனி என்கிற திரைப்படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை மலையாள சினிமாவின் சீனியர் முன்னணி இயக்குனரான ஜோஷி இயக்கியுள்ளார்.
இதில் ஒரு கல்லூரி மாணவியாக அதேசமயம் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையைக் கற்ற ஒரு இளம் பெண்ணாக நடித்துள்ளார் கல்யாணி. படத்தில் இவருக்கு சண்டைக் காட்சிகளும் உள்ளன. இந்த படத்தில் தான் வாங்கிய குத்துகள், உதைகள், ரத்தக்காயங்கள், தான் விட்ட கண்ணீர், அது மட்டுமல்ல தனது புன்னகை எல்லாமே நிஜம்தான் என்று தற்போது கூறியுள்ளார் கல்யாணி.
“எப்போதுமே ஒரு வசதியான சூழலுக்குள் நம்மை வைத்துக் கொள்ளுவது வளர்ச்சிக்கு உதவாது என்பதை தாமதமாகத் தான் புரிந்து கொண்டேன். படத்தில் என்னுடைய சண்டைக் காட்சிகளின் போது உங்களுடைய ஆரவார கூச்சலும் கைதட்டல்களும் என்னை இன்னும் உற்சாகப்படுத்துகின்றன” என்று கூறியுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன்.