பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
தமிழ் சினிமாவில் இதற்கு முன் பல படங்களுக்கு ஸ்லம் (கூவம்கரையோர குடிசை பகுதி) செட் போடப்பட்டிருக்கிறது. முன்னணி நடிகர் நடிகைகள் நிஜமான ஸ்லம் பகுதிக்குள் வந்து நடிப்பதில் சிரமம் இருக்கும், அங்கு வசிப்பவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கும் என்பதால் இந்த செட் போடுவார்கள். கடைசியாக போடப்பட்ட பெரிய ஸ்லம் செட் ஆறு படத்திற்காக ஹரி போட்டார். இப்போது அதையும் விட இதுவரை போடப்பட்ட ஷெட்களிலேயே பிரமாண்டமானதாக வேலைக்காரன் படத்திற்காக உருவாக்கி உள்ளார்கள்.
சுமார் 8 ஏக்கரில் போடப்பட்ட இந்த ஷெட்டில் ரெயில்வே பாலம், சர்ச், மசூதி, கோவில், கூவம் ஆறு என எல்லாவற்றையும் கொண்டு வந்திருக்கிறார். செட்டுக்கான பட்ஜெட் 6 கோடி என்கிறார்கள். இதனை உருவாக்கிய கலை இயக்குனர் முத்துராஜ் இதுபற்றி கூறியிருப்பதாவது:
கதைப்படி இப்படத்தின் கதாநாயகனும், நண்பர்களும் இந்த ஏரியாவில் வாழ்பவர்கள் என்பதால் படத்தின் ஒரு பெரும்பகுதி இந்த ஏரியாவில் தான் நடக்கின்றது. தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தான் இந்த முழு எரியாவையே செட்டாக போட்டுவிடலாம் என்று யோசனையை தந்தார். இந்த செட்டிற்காக சுமார் 15 சேரிக்களை நேரில் சென்று பார்த்து, அங்கு வாழும் மக்களின் வாழ்வு முறையையும், அந்த இடங்களையும் நன்கு உள்வாங்கி, நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இந்த செட்டை உருவாக்கினோம்.
இந்த செட்டை முழுவதும் முடிக்க 55 நாட்கள் ஆனது. தினசரி கூலி வாங்கும் தொழிலாளிகள் மற்றும் எல்லா மதத்தை சார்ந்த அடித்தட்டு மக்கள் வாழும் ஒரு தத்ரூப ஏரியாவாக இந்த இடத்தை உருவாக்க வேண்டுமென்பது எங்கள் நோக்கமாக இருந்தது. உருவாக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு குணாதிசயமும் நோக்கமும் இருக்கும். மேலும் எதார்த்தத்தை கொண்டு வர முழு செட்டையுமே நெரிசல் மிகுந்த இடமாக வடிவமைத்தோம்.
நிஜ குப்பைகள், பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்கள் ஆகியற்றை உபயோகித்து அந்த எரியாவின் இயல்பை கொண்டு வர முனைந்துள்ளோம். இந்த முழு செட்டையும் சுற்றி ஒரு கூவத்தையும் உருவாக்கியுள்ளோம். இந்த செட்டின் மொத்த பரப்பளவு 7.5 ஏக்கராகும். இந்த செட்டில் 50 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம் என்றார் முத்துராஜ்.