தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் | கனா தர்ஷனின் புதிய பட அறிவிப்பு | இளம் நாயகிகளும் பொறாமைப்படும் 'மார்கண்டேயினி' த்ரிஷா | தமிழ் ரசிகர்களைக் கவராத 'புஷ்பா… புஷ்பா…' |
பெப்சி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இரண்டு நாட்களுக்குள் முடிவுக்கு வரும் என்று ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். அதோடு, சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டமும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
பெப்சி தொழிலாளர்களுக்கு மாற்றாக புதிய பணியாளர்களை தயாரிப்பாளர் சங்கம் தேர்வு செய்து முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக விளம்பரமும் வெளியானது. இதனை கண்டித்து கடந்த 1ம் தேதி முதல் பெப்சி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகிறது. இன்று 5-வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்கிறது. இதன்காரணமாக காலா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இதை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டமும் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷால் உடன் பெப்சி நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். 4 மணி நேரம் பேச்சுவாத்தை நடந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், இரண்டு நாட்களுக்குள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் என்றார்.
பின்னர் பேசிய தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், புதிய டெக்னிசியன்களுக்கான அரிய வாய்ப்பு என்ற விளம்பரத்தை திரும்ப பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு அறிவிப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு எதிராக இன்று(செப்., 5) வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக பெப்சி அறிவித்துள்ளது.