தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

சினிமாவுக்கு இணையாக ஓடிடி தளங்களும் வளர்ந்து விட்ட நிலையில் சிறிய படங்களுக்கு கூட அது நம்பிக்கை தருவதாக கடந்த சில வருடம் முன்பு வரை இருந்தது. ஆனால் சமீபகாலமாக மிகப்பெரிய படங்களை கூட சில ஓடிடி நிறுவனங்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டுவதும் பின்னர் பேரம் பேசி குறைந்த விலைக்கு வாங்குவதும் என சூழல் மாறி உள்ளது. பெரிய படங்களுக்கே இப்படி என்றால் ஓடிடியை பெரிதாக நம்பி உள்ள சின்ன பட்ஜெட் படங்களின் நிலை ரொம்பவே கவலைக்கிடமாக இருக்கிறது என்று நடிகர் விஷால் சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல தற்போது ஏப்ரல் மாதமே இன்னும் முடியாத நிலையில் அனைத்து ஓடிடி தளங்களும் இந்த வருடத்திற்கான தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வரையறைக்குள் (பட்ஜெட்டுக்குள்) படங்களை வாங்கி முடித்து விட்டன என்றும், இன்னும் எட்டு மாதங்களுக்கு எந்த புது படங்களையும் அவர்கள் வாங்கப் போவதில்லை என்றும் கூறி ஓடிடி தளங்கள் தங்களது கதவை அடைத்து விட்டன என்று சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல் ஒன்றை பகிர்ந்து உள்ளார் விஷால்.
மும்பையில் ஓடிடி வட்டாரத்தில் உள்ள தனது நண்பர்கள் மூலமாக இந்த தகவல் தனக்கு அதிகாரப்பூர்வமாக தெரிய வந்ததாகவும், சிறிய பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள், அடுத்த ஐந்து மாதங்களில் பத்து பெரிய படங்கள் வெளியாக இருப்பதால் தங்களது படங்களை இன்னும் ஆறு மாதம் கழித்து ரிலீஸ் செய்தால் ஓரளவுக்கு தப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.




