ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் | கனா தர்ஷனின் புதிய பட அறிவிப்பு |
நடிகர் ரஜினிகாந்த்திற்கு சென்னை, கிண்டியில் ஆஷ்ரமம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். இதை அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கவனித்து வருகிறார். கிண்டியில் உள்ள இந்த பள்ளி, வாடகை இடத்தில் இயங்கி வருகிறது.
இந்நிலையில் கடந்த பல மாதங்களாக இந்த கட்டடத்திற்கு வாடகை அளிக்கப்படவில்லை என்றும், சுமார் ரூ.5 கோடி வரை வாடகை பாக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன்காரணமாக இந்த இடத்தின் உரிமையாளர் பள்ளியை பூட்டிவிட்டதாகவும், பள்ளியில் இருந்த குழந்தைகள் வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இதை ரஜினி தரப்பு மறுத்துள்ளது. ஆஷ்ரமம் பள்ளி தொடர்பாக வெளியாகும் தகவல்கள் எதையும் நம்ப வேண்டாம். இதுசம்பந்தமாக விரைவில் உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.