நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள், அவர்களாகவே எந்த விஷயத்தையும் பேசுவதில்லை. அவர்களைப் பேச வைப்பதே பிக் பாஸ் தான். தினமும் என்னென்ன நடக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு, எழுதி, அந்த ஸ்கிரிப்ட்டுக்கு ஏற்றபடி மற்றவர்களை நடிக்க வைத்து வேலை வாங்கும் ஒரு இயக்குனராகத்தான் 'பிக் பாஸ்' இருக்கிறார் எனப் பலரும் ஆரம்பித்திலிருந்தே சொல்லி வருகிறார்கள்.
இந்த திட்டமிட்ட நாடக அரங்கேற்றத்தை தமிழ் பிக் பாஸ்-ல் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் அழகாக நடித்துக் கொடுத்து நிகழ்ச்சியைக் காப்பாற்றி வருகிறார்கள். ஆனால், தெலுங்கில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களால் அதை 'இம்ப்ரொவைஸ்' செய்து நடிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரியும்.
நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு 'பிக் பாஸ்' நடத்திய நாடகம் நன்றாகவே புரிந்திருக்கும்.
நாடகம் 1 - எதிராளிகளான காயத்ரி, ஓவியா இருவரையும் நிருபவர்களாக நடிக்க வைத்தது
நாடகம் 2 - சினேகனிடம் ரைசா தன்னை ஒருமையில் பேச வேண்டாம் என்று சொன்னது
நாடகம் 3 - அடுத்த வாரம் எலிமினேட் ஆகாமல் இருந்தால் தலைவர் பதவிக்குப் போட்டி போடப் போடுகிறேன் என ஜுலி சொன்னது
நாடகம் 4 - ஓவியா, ஆரவ் இடையே மீண்டும் ஒரு நெருக்கமான நட்பை ஏற்படுத்தியது
நாடகம் 5 - திடீரென ஒரு காட்சியில் காயத்ரி, ஓவியாவிடம் 'முகரக்கட்டை' எனத் திட்டியதற்கு மன்னிப்பு கேட்டது
நாடகம் 6 - காயத்ரியும், ஓவியாவும் மனம் விட்டு பேசிக் கொண்டது
'பிக் பாஸ்' நாடகம், இனி, தீவிரமாகத் தொடரும்...