பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
வட கிழக்கு இந்தியாவில் உள்ள அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் கூட 'பாகுபலி 2' படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறதென்றால் மக்கள் அதை வரவேற்று ரசிப்பதுதான் காரணம். அங்கு கூட பெரும்பாலான தியேட்டர்களிலும் வெளியாக சுமார் 6 கோடி வரை வசூலித்துள்ளது.
இந்தியத் திரையுலகில் பெரும் நடிகர்கள் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் 'ஆமிர்கான், சல்மான் கான், ஷாரூக் கான், கமல்ஹாசன், ஏன் அமிதாப்பச்சன்' உள்ளிட்டவர்கள் கூட 'பாகுபலி 2' படத்தைப் பற்றி டிவிட்டரில் கூட 140 எழுத்துக்களில் ஒன்றும் சொல்லாதது இப்போதுதான் மீடியாக்களின் கவனத்திற்கு வந்துள்ளது. இது பற்றி நாம் கடந்த வாரமே ஒரு செய்தியை எழுதியிருந்தோம்.
'பாகுபலி 2' இப்போது இரண்டாவது வாரத்திலும் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துவிட்டது. 1000 கோடி ரூபாய் உலக வசூலைக் கடந்து, ஹிந்தியில் மட்டும் 300 கோடி வசூலைக் கடந்து, அமெரிக்காவிலும் 100 வசூலைக் கடந்துள்ளது இந்தப் படம்.
இருப்பினும் ஹிந்தித் திரையுலகின் 'கான்' நடிகர்களும் தமிழ்த் திரையுலகில் கமல்ஹாசனும் படம் பற்றி எதுவும் சொல்லாதது அவர்களுக்குள் இருக்கும் பொறாமை என பல ஊடகங்களும், சமூக வலைத்தளங்களில் ரசிகர்களும் இப்போதுதான் பகிர ஆரம்பித்துள்ளார்கள். இப்படி ஒரு படத்தை உலக அளவில் கவனத்தையும், வசூலையும் பெறும் அளவிற்கு நாம் யோசிக்காமல் விட்டோமே என்ற அதிர்ச்சிதான் அவர்களுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.
அதே சமயம், கமல்ஹாசன் 'விஸ்வரூபம் 2' படத்தையும், சல்மான் கான் 'டியூப்லைட்' படத்தையும், அமிதாப் பச்சன் 'சர்க்கார் 3' படத்தைப் பற்றி 'பாகுபலி 2' வெளிவந்த பின், சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரப்படுத்த மறக்கவில்லை.
உலக அளவில் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் 'பாகுபலி 2' படம் பற்றியோ, இயக்குனர் ராஜமௌலி பற்றியோ அவர்கள் ஒரு வார்த்தை பாராட்டிப் பேச தயங்குவது ஏன்...?.