பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு இந்த ஆண்டு மூன்று திரைப்படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. 'ப.பாண்டி, கடம்பன், சிவலிங்கா' என வெளிவந்த மூன்று படங்களின் தலைப்புகளுமே அந்தந்த கதாநாயகனின் கதாபாத்திரப் பெயரை தலைப்பாக வைத்து வந்துள்ளன. மேலும், நிஜப் பெயர்களிலும் இந்தப் படங்களுக்கிடையில் ஒரு ஒற்றுமை உண்டு. தனுஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'ப.பாண்டி' படத்தின் கதாநாயகன் ராஜ்கிரண். ராஜ்கிரண் கதாநாயகனாக நடித்த 'மஞ்சப் பை' படத்தின் மூலம்தான் 'கடம்பன்' படத்தின் இயக்குனர் ராகவா அறிமுகமானார். 'கடம்பன்' பட இயக்குனர் ராகவா பெயரை தன் பெயரின் முதல் பெயராக வைத்திருப்பவர் 'சிவலிங்கா' படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸ்.
மும்முனைப் போட்டியில் 'சிவலிங்கா, கடம்பன்' படங்களை விட 'ப. பாண்டி' படம் விமர்சகர்கள் மத்தியிலும், தியேட்டர் வசூலிலும் முன்னணியில் உள்ளது. மற்ற இரண்டு படங்களுக்கும் முன்னதாகவே 'ப.பாண்டி' படத்தின் பத்திரிகையாளர்கள் காட்சியை நடத்தி முடித்தனர். அது 'ப. பாண்டி' படத்திற்கு பேருதவியைப் புரிந்துள்ளது. படம் பார்த்த அனைவருமே படம் சிறப்பாக உள்ளதாகப் பாராட்டிய தகவல் சமூக வலைத்தளங்களிலும் வெளியாக படத்திற்கு நல்லதொரு ஆரம்பத்தைக் கொடுத்துள்ளது. நல்ல படங்களுக்கு முதலில் வரும் விமர்சனங்களும் உதவிகரமாக இருக்கம் என்பதை 'ப.பாண்டி' படம் புரிய வைத்துள்ளது.
விமர்சனங்களை மூன்று நாட்கள் கழித்து போடுங்கள் என விஷால் சொன்னதும், விமர்சனங்களைத் தடை செய்ய வேண்டும் என்று பேசிய ராகவா லாரன்ஸும் 'ப.பாண்டி' படத்திற்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்தாவது மாறினால் சரி. நல்ல படங்கள் வெளிவந்தால் அவை விமர்சனங்களையும் மீறி வெற்றி பெறும் என்பதே உண்மை.