நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனுஷ் திருமணம் கடந்த 2004ம் ஆண்டு நடந்தது. இவர்களின் 19 வருட வாழ்க்கையில் இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். தற்போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். மகன்கள் இருவர் வீட்டிலும் வளர்கிறார்கள். இருவரையும் சேர்த்து வைக்க ரஜினி எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
இந்தநிலையில் தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை முதன்மை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் வருகிற அக்டோபர் 7ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.