ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனுஷ் திருமணம் கடந்த 2004ம் ஆண்டு நடந்தது. இவர்களின் 19 வருட வாழ்க்கையில் இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். தற்போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். மகன்கள் இருவர் வீட்டிலும் வளர்கிறார்கள். இருவரையும் சேர்த்து வைக்க ரஜினி எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
இந்தநிலையில் தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை முதன்மை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் வருகிற அக்டோபர் 7ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.