பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
ஜோதிகா நடிக்க சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரிக்கும் படம் மகளிர் மட்டும். இதில் ஜோதிகாவுடன் சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா என மூன்று மாஜி ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். படத்தில் ஜோதிகா ஒரு ஆவண பட இயக்குனர். அவர் மூன்று விதமான பெண்களின் வாழ்க்கையை ஆவணப்படமாக இயக்குகிறார். அந்த 3 பெண்கள் தான் இந்த மாஜி ஹீரோயின்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை சொல்வலும், ஆவணப்படப்பிடிப்பில் ஜாலியாக கலந்து கொள்வதுமான திரைக்கதை என்பது கசிந்த வரையில் தெரிந்த கதை.
மூன்று மாஜி ஹீரோயின்களை நடிக்க வைத்தது ஏன் என்பது பற்றி இயக்குனர் பிரம்மா கூறியதாவது: இந்த கதைக்கு மூன்று விதமான குணாதிசயங்கள் கொண்ட பெண்கள் தேவைப்பட்டார்கள். இதற்கு சில குணசித்திர நடிகைகளை நடிக்க வைத்திருக்கலாம். ஆனால் மக்களுக்கு ஏற்கனவே அறிமுகமான தனித்தனி குணாதிசயங்கள் கொண்டவர்களை நடிக்க வைத்தால் மக்களுக்கு சொல்ல வந்த விஷயம் எளிதாக சென்றடையும் என்பதால் அவர்களை தேர்வு செய்தேன். இந்த மூவரின் படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். அவர்கள் எந்த கேரக்டரில் நடித்தாலும் அவர்களின் தனித்தன்மை வெளிப்படும். ஊர்வசி எதையும் ஜாலியாக எடுத்துக் கொள்கிற கேரக்டர், சரண்யா அன்பை பொழிகிறவர், பானுப்பிரியா வெகுளியானவர். இந்த குணாசிதியங்கள் அவர்களின் படங்களில் வெளிப்பட்டவை. அது எனக்கு தேவைப்பட்டது. அதற்காக அவர்களை தேர்வு செய்தேன். என்கிறார் பிரம்மா.