பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
நயன்தாரா நடித்த 'அறம்' படம் மூலம் கவனிக்க வைத்தவர் கோபி நயினார். அந்த படம் வெற்றிப் படமாக அமைந்தபோதும் அடுத்த வாய்ப்பு எளிதாக கிடைக்கவில்லை. சில வருட இடைவெளிக்கு பிறகு தற்போது அவர் இயக்கி வரும் படம் 'மனுஷி'. இந்த படத்தை இயக்குனர் வெற்றி மாறன் தயாரிக்கிறார்.
படம் பற்றி கோபி நயினார் கூறும்போது “ஜனநாயத்திற்காக குரல் கொடுக்கும் மனுஷியை படமாக்கி உள்ளேன். இந்த படத்தை எந்த தயாரிப்பாளரும் தயாரிக்க முன்வராதபோது கதையை கேட்டுவிட்டு வெற்றி மாறன் தயாரிக்க முன்வந்தார். அவர் லாபத்தை பார்க்கவில்லை. படம் சொல்லும் விஷயத்தை மதித்து தயாரிக்க முன்வந்தார்.
இந்த கதைக்கு ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றவர்களை முதலில் அணுகினேன். பல்வேறு காரணங்களால் இவர்களால் நடிக்க முடியவில்லை. பின்புதான் ஆண்ட்ரியா நடிக்க முன்வந்தார். டிரைலரில் போலீஸ் ஸ்டேஷனில் ஆண்ட்ரியா உட்காரும் காட்சியை பலரும் இன்றைக்கு பாராட்டுகிறார்கள். இந்தக் காட்சியில் ஒரு நாளுக்கு மேல் நடிக்க மாட்டார் என்று நினைத்தேன். என் எண்ணத்தைப் பொய்யாக்கி 9 நாட்கள் அப்படி உட்கார்ந்தபடியே நடித்து கொடுத்தார். ஸ்டூல் மேல் உட்காருங்கள். நான் எடிட்டிங்கில் சரி செய்து கொள்கிறேன் என்று சொல்லியும் கேட்காமல் நடித்துக் கொடுத்தார். ஆண்ட்ரியாவுக்கு இந்த படம் அவரது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்றார்.