ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

நயன்தாரா நடித்த 'அறம்' படம் மூலம் கவனிக்க வைத்தவர் கோபி நயினார். அந்த படம் வெற்றிப் படமாக அமைந்தபோதும் அடுத்த வாய்ப்பு எளிதாக கிடைக்கவில்லை. சில வருட இடைவெளிக்கு பிறகு தற்போது அவர் இயக்கி வரும் படம் 'மனுஷி'. இந்த படத்தை இயக்குனர் வெற்றி மாறன் தயாரிக்கிறார்.
படம் பற்றி கோபி நயினார் கூறும்போது “ஜனநாயத்திற்காக குரல் கொடுக்கும் மனுஷியை படமாக்கி உள்ளேன். இந்த படத்தை எந்த தயாரிப்பாளரும் தயாரிக்க முன்வராதபோது கதையை கேட்டுவிட்டு வெற்றி மாறன் தயாரிக்க முன்வந்தார். அவர் லாபத்தை பார்க்கவில்லை. படம் சொல்லும் விஷயத்தை மதித்து தயாரிக்க முன்வந்தார்.
இந்த கதைக்கு ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றவர்களை முதலில் அணுகினேன். பல்வேறு காரணங்களால் இவர்களால் நடிக்க முடியவில்லை. பின்புதான் ஆண்ட்ரியா நடிக்க முன்வந்தார். டிரைலரில் போலீஸ் ஸ்டேஷனில் ஆண்ட்ரியா உட்காரும் காட்சியை பலரும் இன்றைக்கு பாராட்டுகிறார்கள். இந்தக் காட்சியில் ஒரு நாளுக்கு மேல் நடிக்க மாட்டார் என்று நினைத்தேன். என் எண்ணத்தைப் பொய்யாக்கி 9 நாட்கள் அப்படி உட்கார்ந்தபடியே நடித்து கொடுத்தார். ஸ்டூல் மேல் உட்காருங்கள். நான் எடிட்டிங்கில் சரி செய்து கொள்கிறேன் என்று சொல்லியும் கேட்காமல் நடித்துக் கொடுத்தார். ஆண்ட்ரியாவுக்கு இந்த படம் அவரது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்றார்.