பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா |
கதாநாயகர்களுடன் கட்டிப்பிடித்து டூயட் பாடும் கதாபாத்திரங்களை ஒதுக்கிவைத்துவிட்டு கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தரும் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. அதனால்தான் கிட்டத்தட்ட பதினேழு வருடங்களுக்கு மேல் திரையுலகில் தாக்குப் பிடித்து நிலைத்து நிற்கிறார். இந்த நிலையில் ஆண்ட்ரியா கதையின் நாயகியாக நடித்துள்ள அனல் மேலே பனித்துளி என்கிற படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
அதே சமயம் இன்னொரு பக்கம் நயன்தாராவை வைத்து அறம் என்கிற படத்தை இயக்கிய கோபி நாயனார், தற்போது இயக்கிவரும் மனுஷி திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வந்தார் ஆண்ட்ரியா. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விட்டதாக தயாரிப்பு நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த இரண்டு படங்களையும் ஒரே தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்துள்ளது. மனுஷி திரைப்படத்தின் டப்பிங் பணிகளும் முடிந்துவிட்டதால் அந்த படம் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகி வருகிறது..