ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
நடிகை சாய் தன்ஷிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'புரூப்'. ஐ ராதிகா என்பவர் இயக்கி உள்ள இந்த படம் ஒரு கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது. ருத்வீர் வதன் என்பவர் கதாநாயகனாக நடிக்க அசோக், ரித்விகா, இந்திரஜா மைம் கோபி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். வரும் மே-3ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு தற்போது புரூப் படக்குழு நடிகர் ரஜினிகாந்தின் வாழ்த்துக்களை பெற்றுள்ளனர்.
புரூப் படக்குழு சார்பில் நாயகன் ருத்வீர், ரஜினியை நேரில் சந்தித்தார். அப்போது படம் குறித்து விசாரித்த ரஜினிகாந்த் படம் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார் சாய் தன்ஷிகா. அந்த வகையில் அவருக்கும், ரஜினிக்குமான நட்பை பயன்படுத்தி அவரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர் புரூப் படக்குழுவினர்.