நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
நடிகை சாய் தன்ஷிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'புரூப்'. ஐ ராதிகா என்பவர் இயக்கி உள்ள இந்த படம் ஒரு கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது. ருத்வீர் வதன் என்பவர் கதாநாயகனாக நடிக்க அசோக், ரித்விகா, இந்திரஜா மைம் கோபி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். வரும் மே-3ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு தற்போது புரூப் படக்குழு நடிகர் ரஜினிகாந்தின் வாழ்த்துக்களை பெற்றுள்ளனர்.
புரூப் படக்குழு சார்பில் நாயகன் ருத்வீர், ரஜினியை நேரில் சந்தித்தார். அப்போது படம் குறித்து விசாரித்த ரஜினிகாந்த் படம் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார் சாய் தன்ஷிகா. அந்த வகையில் அவருக்கும், ரஜினிக்குமான நட்பை பயன்படுத்தி அவரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர் புரூப் படக்குழுவினர்.