நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

சினிமா நடிகர்கள், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஏதாவது ஒரு தகவல் வெளியானால் அது மிகவும் பரபரப்பாகி விடுகிறது. காலம் காலமாக இது இருந்து வருகிறது. இருந்தாலும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் என்னென்னவோ தேடித் துருவி எடுத்து அதை வீடியோவாக வெளியிட்டு பார்வைகளை அள்ள வேண்டும் என்ற ஒன்றுதான் பிரதானமாக இருக்கிறது.
கடந்த வாரம் ரவி மோகன், கெனிஷா இருவரும் திருமண நிகழ்வு ஒன்றில் ஜோடியாகக் கலந்து கொண்டது மிகவும் வைரலானது. அதன்பின் ரவி மோகன் விளக்க அறிக்கை, அவரது மாமியார் தயாரிப்பாளர் சுஜாதா விளக்க அறிக்கை என அது விஸ்வரூபம் எடுத்தது.
இந்த வாரத்திற்கான பரபரப்பாக நடிகர் விஷால், நடிகை சாய்தன்ஷிகா திருமண அறிவிப்பு நேற்று வெளியாகி பரபரப்பை ஆரம்பித்து வைத்துள்ளது. இருவரும் ஒரு படத்தில் கூட ஒன்றாக சேர்ந்து நடித்ததில்லை. அப்புறம் எப்படி இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது என்று ரசிகர்கள் யோசித்தார்கள். தங்களுக்குள் 15 வருடங்களாகப் பழக்கம் என்று சாய் தன்ஷிகா நேற்று பேசியிருந்தார்.
இதனிடையே, விஷால் வயது என்ன ? சாய் தன்ஷிகா வயது என்ன ? இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் என்ன என்று சமூக வலைத்தளங்களில் ஆராச்சி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் ரசிகர்கள்.
விஷால் பிறந்தநாளான ஆகஸ்ட் 29 அன்று அவர்களது திருமணம் நடைபெற உள்ளது. அன்று விஷாலுக்கு 48 வயது நிறைவடைகிறது. சாய் தன்ஷிகவுக்கு தற்போது 35 வயது முடிந்துள்ளது. இருவருக்குமான வயது வித்தியாசம் 13.
இதற்கு முன்பு விஷாலின் நெருங்கிய நண்பரான நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட போது கூட இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் 17 வருடங்களாக இருந்தது குறித்து நிறையவே விமர்சனங்கள் வெளிவந்தன.