சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

'அங்காடி தெரு, மாஞ்சா வேலு, கல்லூரி காலங்கள், தெய்வத்திருமகள், வேலாயுதம், சாட்டை, ஜில்லா' உள்பட பல படங்களில் நடித்தவர் பிளாக் பாண்டி. சின்னத்திரையிலும் 'கோலங்கள், கனா காணும் காலங்கள்' என பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் 'உதவும் மனிதம்' என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறார் பிளாக் பாண்டி. இதன்மூலம் இதுவரை 75 பேருக்கு மேல் தான் படிக்க வைத்திருப்பதாக கூறும் அவர், 'தற்போது கூட நான்கு இலங்கை மாணவிகளை கல்லூரியில் படிக்க வைத்துள்ளேன். நான் பத்தாவது மட்டுமே படித்துள்ளேன். அந்த பத்தாம் வகுப்பிலும் பெயில் ஆகிவிட்டேன். அதன் காரணமாக என்னுடைய தங்கையை பட்டப்படிப்பு படிக்க வைத்த நான், இப்போது இந்த அறக்கட்டளை மூலம் பல ஏழை எளிய மாணவ மாணவிகளை படிக்க வைத்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்து வருகிறேன்' என்கிறார் பிளாக் பாண்டி.




