தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் | தெலுங்கில் மாஸ் காட்டிய 'அகண்டா-2' முதல்... பீல் குட் மூவி 'அங்கம்மாள்' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | 'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் நிகிலா விமல் படத்துக்கு அடித்த ஜாக்பாட் | 'பராசக்தி' படத்தில் பசில் ஜோசப் ; உறுதி செய்த சிவகார்த்திகேயன் | சிறப்பு பாடல்களுக்கு இனிமேல் நடனமாட மாட்டேன்!- ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | 'பராசக்தி'யில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' பாடல் வெளியானது! | கார்த்தியின் 'வா வாத்தியார்' பொங்கலுக்கு திரைக்கு வருகிறதா? | 'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. |

'அங்காடி தெரு, மாஞ்சா வேலு, கல்லூரி காலங்கள், தெய்வத்திருமகள், வேலாயுதம், சாட்டை, ஜில்லா' உள்பட பல படங்களில் நடித்தவர் பிளாக் பாண்டி. சின்னத்திரையிலும் 'கோலங்கள், கனா காணும் காலங்கள்' என பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் 'உதவும் மனிதம்' என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறார் பிளாக் பாண்டி. இதன்மூலம் இதுவரை 75 பேருக்கு மேல் தான் படிக்க வைத்திருப்பதாக கூறும் அவர், 'தற்போது கூட நான்கு இலங்கை மாணவிகளை கல்லூரியில் படிக்க வைத்துள்ளேன். நான் பத்தாவது மட்டுமே படித்துள்ளேன். அந்த பத்தாம் வகுப்பிலும் பெயில் ஆகிவிட்டேன். அதன் காரணமாக என்னுடைய தங்கையை பட்டப்படிப்பு படிக்க வைத்த நான், இப்போது இந்த அறக்கட்டளை மூலம் பல ஏழை எளிய மாணவ மாணவிகளை படிக்க வைத்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்து வருகிறேன்' என்கிறார் பிளாக் பாண்டி.