எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
ராஜா ராணி படத்தை அடுத்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கிய அட்லி பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். அதையடுத்து ஷாருக்கான் - விஜய்யை இணைத்து ஒரு படம் இயக்கப் போவதாக கூறிவந்தார். தற்போது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் இடத்தில் அவர் கதை சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தமிழில் விஜய் நடிப்பில் தான் இயக்கிய தெறி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார் அட்லி. இந்த படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஏற்கனவே மும்பையில் வீடு வாங்கிய அட்லி தற்போது அங்கே ரூ.40 கோடி மதிப்பில் அலுவலகம் ஒன்றை வாங்கி உள்ளார். தொடர்ந்து பாலிவுட்டில் படங்கள் இயக்குவது, தயாரிப்பது என்று ஈடுபடப் போவதால் இப்படி புதிய அலுவலகம் திறந்திருக்கும் அட்லி, அடுத்து ஷாருக்கான் மட்டுமின்றி பாலிவுட்டில் பிரபலமாக உள்ள இன்னும் சில ஹீரோக்களிடத்திலும் கால்ஷீட் வாங்கி அடுத்தடுத்து ஹிந்தியில் படங்கள் இயக்குவதற்கும் திட்டமிட்டிருக்கிறாராம்.