பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

செல்வராஜ் செல்வமணி இயக்கத்தில் துல்கர் சல்மான் பாக்யஸ்ரீ, ராணா நடித்த 'காந்தா' படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் இன்று நடந்தது. இதில் துல்கர் பேசியது: என் அப்பா மம்முட்டி மூன்று தேசிய விருதுகள் வாங்கி இருக்கிறார். மற்ற விருதுகளும் நிறைய வாங்கி இருக்கிறார், இன்னும் வாங்குவார். இதுவரை நான் தேசிய விருது வாங்கியதில்லை, காந்தா படத்தை பார்த்தவர்கள், காந்தா விமர்சனங்களில் எனக்கு தேசிய விருது கிடைக்கும் என்கிறார்கள். அப்படி கிடைத்தால் மகிழ்ச்சி.
சமுத்திரக்கனி, ராணா, நான், பாக்ஸ்ரீ ஆகியோர் போட்டி போட்டு நடிப்போம். குறிப்பாக குமாரி என்ற அந்த ஹீரோயின் கேரக்டருக்காக பல மாதங்கள் காத்திருந்து பாக்ஸ்ரீயை நடிக்க வைத்தார் இயக்குனர். அவர் நடிப்பும் அருமையாக வந்துள்ளது. அந்த கால சினிமாவை கருவாக வைத்து உருவாக்கிய இந்த படம் மக்களிடையே வரவேற்பு பெற்றது மகிழ்ச்சி. இதுவரைக்கும் 40க்கும் அதிகமான படங்கள் நடித்திருக்கிறேன். என் நடிப்பில் அப்பாவுக்கு பிடித்த படம் காந்தாவாக இருப்பது மகிழ்ச்சி.
நடிகர்கள் எம்ஜிஆர், ஜெமினி கணேசனை நான் இமிடெட் பண்ணுவதில்லை. அவர்கள் தாக்கம் படத்தில் இருந்திருந்தால் அதற்கு இயக்குனர் தான் காரணம். ராணாவும், நானும் பணம், பிஸினஸ்க்காக இந்த படத்தை பண்ணவில்லை. சினிமா மீதான ஆர்வம் காரணமாக பண்ணினோம். இவ்வாறு அவர் பேசினார்.