சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி ரீ ரிலீஸ் ஆகிறது | 22 வருடங்களுக்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரத்தில் இப்போது கேமியோவாக நடிக்கும் மம்முட்டி | கடைசியாக நடித்த படத்தில் நள்ளிரவு 2 மணிக்கு நடனமாடிய தர்மேந்திரா | இங்கு மட்டுமல்ல சவுதியிலும் 'ஜனநாயகன்' வெளியாவதில் சென்சார் சிக்கல் | தமிழில் கவனம் செலுத்தும் மலையாள நடிகர் அஜு வர்கீஸ் | சிரஞ்சீவி பட இயக்குனருக்கு மோகன்லால் கொடுத்த அதிர்ச்சி | சிவகார்த்திகேயன் திரையிலும், நிஜத்திலும் என் சகோதரர் : அதர்வா நெகிழ்ச்சி | 'ஹேப்பி ராஜ்' படப்பிடிப்பு நிறைவு | 'ஜனநாயகன்' தணிக்கை தாதமம், காரணம் என்ன ? | பிளாஷ்பேக்: மூன்று நட்சத்திரங்களின் திரைப் பிரவேசத்திற்கு வித்திட்ட “பட்டினப்பிரவேசம்” |

நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா ஆரம்ப கால கட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, மாயாவி, பேரழகன் ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். கடைசியாக இருவரும் இணைந்து சில்லுனு ஒரு காதல் படத்தில் இணைந்து நடித்து பின்னர் திருமணம் செய்து குடும்பம், குழந்தைகள் என தங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த சில வருடங்களாக ஜோதிகா கதாநாயகி மற்றும் முதன்மை கதாபாத்திரம் கொண்ட படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இப்போது பல வருடங்களுக்கு பிறகு சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை ‛பெங்களூரு டேஸ்' இயக்குனர் அஞ்சலி மேனன் மற்றும் சில்லுக்கருப்பட்டி பட இயக்குனர் ஹலிதா ஹமிம் என இருவரில் ஒருவர் இயக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.