காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் | 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை |

விஜய் நடித்து ஜனவரி 9ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு தணிக்கை வாரியம் இன்னும் சான்றிதழ் வழங்கவில்லை. அதை வழங்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கின் விசாரணை இன்றைக்கும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இது குறித்து திரையுலகில் விசாரித்ததில் சில தகவல்களைச் சொல்கிறார்கள். படத்தில் ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளதாம். அடுத்து பழைய திரைப்படப் பாடல் ஒன்றைப் பயன்படுத்தி உள்ளார்களாம். அவற்றிற்கான 'என்ஓசி'யை தருவதில் தயாரிப்பு நிறுவனம் தாமதப்படுத்தியதுதான் காரணம் என்று சொல்கிறார்கள்.
ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் உள்ள உண்மைத் தன்மை என்பதை தணிக்கை வாரியம் எப்போதுமே உன்னிப்பாகக் கவனிப்பார்களாம். நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அதில் எந்தவிதமான தவறான வழிகாட்டுதல்களும் இருப்பதை அனுமதிக்க மாட்டார்களாம்.
இப்படியான சில வழிகாட்டுதல் நெறிமுறைகளை சமீப காலங்களில் சரியாக பின்பற்றுப்பட்டு வருவதால், அவற்றைச் சரி செய்யும் பொறுப்பு தயாரிப்பு நிறுவனத்தினடம்தான் இருக்கிறது என்கிறார்கள்.
இன்று மதியம் விசாரணைக்கு வந்த பின் இந்த வழக்கு பற்றிய மேல் விவரங்கள் தெரிய வரலாம்.




