புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நாயகனாக நடித்த படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி. அந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார் வடிவேலு. அதையடுத்து தான் சில ஆண்டு இடைவெளிக்குப்பிறகு நடிக்க வந்தபோது,அந்த படத்தில்தான் வடிவேலு நடிக்க நினைத்தார். ஆனால், அந்த பட்ஜெட் டில் படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. இதனால் அப்பட வேலைகள் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கத்திச்சண்டை, சிவலிங்கா படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய்யுடன் 61-வது படத்தில் நடித்து வரும் வடிவேலு தற்போது இம்சை அரசனில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்.
அதோடு, கதை முதல் பாகத்தை விடவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பதால், கடந்த ஒரு வாரகாலமாக டைரக்டர் சிம்புதேவனை அழைத்து சீன் பை சீன் கதை விவாதம் நடத்தி வருகிறாராம் வடிவேலு. ஏற்கனவே இந்த கதையை வடிவேலுவிடம் சொல்லப்பட்டதுதான் என்றபோதும் இப்போது இன்னும் கதையில் கூடுதல் வலு சேர்க்க வேண்டும் என்பதால் திரும்பவும் கேட்டு வருகிறாராம். ஆக, இன்னும் ஓரிரு மாதங்களில் இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகத்தை சிம்புதேவன் தொடங்கி விடுவார் என்று தெரிகிறது.