பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

காமெடியனாக நடித்து வந்த வடிவேலு ஒரு கட்டத்தில் கதையின் நாயகனாக உருவெடுத்த போது எதிர்பாராத விதமாக அரசியல் களத்துக்குள் வந்தார். அப்போது விஜயகாந்துக்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் தீவிரமான பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் அவர் பிரச்சாரம் செய்த திமுக தோல்வி அடைந்ததை அடுத்து வடிவேலுவின் சினிமா மார்க்கெட்டும் டவுன் ஆனது. இதன் காரணமாக பல ஆண்டுகளாக எந்த படத்தில் நடிக்காமல் இருந்தவர் 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கினார். அப்போது அவர் கதையின் நாயகனாக நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படம் தோல்வி அடைந்த போதும், குணச்சித்ர வேடத்தில் நடித்த மாமன்னன் படம் வெற்றியை கொடுத்தது.
இந்த நிலையில் வடிவேலு திமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. அதுகுறித்து அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ‛‛அரசியலுக்கு வரும் எந்த எண்ணமும் என்னிடத்தில் இல்லை. நடிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்தப் போகிறேன்'' என்று பதில் கொடுத்து இருக்கிறார் வடிவேலு.