நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
காமெடியனாக நடித்து வந்த வடிவேலு ஒரு கட்டத்தில் கதையின் நாயகனாக உருவெடுத்த போது எதிர்பாராத விதமாக அரசியல் களத்துக்குள் வந்தார். அப்போது விஜயகாந்துக்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் தீவிரமான பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் அவர் பிரச்சாரம் செய்த திமுக தோல்வி அடைந்ததை அடுத்து வடிவேலுவின் சினிமா மார்க்கெட்டும் டவுன் ஆனது. இதன் காரணமாக பல ஆண்டுகளாக எந்த படத்தில் நடிக்காமல் இருந்தவர் 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கினார். அப்போது அவர் கதையின் நாயகனாக நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படம் தோல்வி அடைந்த போதும், குணச்சித்ர வேடத்தில் நடித்த மாமன்னன் படம் வெற்றியை கொடுத்தது.
இந்த நிலையில் வடிவேலு திமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. அதுகுறித்து அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ‛‛அரசியலுக்கு வரும் எந்த எண்ணமும் என்னிடத்தில் இல்லை. நடிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்தப் போகிறேன்'' என்று பதில் கொடுத்து இருக்கிறார் வடிவேலு.